Showing posts with label புள்ளி. Show all posts
Showing posts with label புள்ளி. Show all posts

புள்ளி

இதோ இந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நட்சத்திரங்கள் மாதிரி பரந்து சிதறிக்கிடக்கும் கோடானுகோடி வலைத்தளங்களுக்கிடையே இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுத்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். பல ஒளியாண்டுகள் பயணித்து இதை அணுகுகிறவருக்கு இங்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. எனது இந்த வலைப்பதிவு முயற்சி எதையாவது எழுது என சதா யோசனைகளை பிராண்டுகிற மனதை சமாதானப்படுத்துவதற்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

தெரியாத்தனமாய் எனக்குள் ஒளிந்திருந்த ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து முதன்முதலாய் சிறுகதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கற்றுத்தந்த நண்பர் சரசுராமையும், என் கதைகளை அதிகம் வெளியிட்டு என்னை வளர்த்திய கல்கி இதழையும் மற்றும் என் எழுத்தில் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய திரு. பா.ராகவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து என் வலைப்பதியலை துவக்குகிறேன்.

இனி உங்கள் பாடு.