tag:blogger.com,1999:blog-64191582024-03-08T06:10:42.942+05:30புள்ளிசித்ரன் ரகுநாத்Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-6419158.post-26999319037721618572023-02-25T13:14:00.002+05:302023-02-25T13:50:30.001+05:30 AI Art - செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் - வரமா சாபமா?<div class="separator"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwAsFbyzaHYfRuasLHLutTODazBCxhjtKOUBXQnBI7S-sM2ph5zYJiM4eYHmmYPrAnyQflMZILBi-69Ez-cOII8W_E8fyu5u_A16hs8iWnJp0xS-Fw1XP0RQTCLmuCeFCYeQp7bq2yvABKxgRR8EgoomrqAQTK6LwVXeTbfnvQuIaiOB0xYCg/s768/3d8fc2a692684001a5a3b5ef13e3f559.jpeg" style="background-color: white; clear: left; float: left; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center; white-space: pre-wrap;"><img border="0" data-original-height="768" data-original-width="512" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwAsFbyzaHYfRuasLHLutTODazBCxhjtKOUBXQnBI7S-sM2ph5zYJiM4eYHmmYPrAnyQflMZILBi-69Ez-cOII8W_E8fyu5u_A16hs8iWnJp0xS-Fw1XP0RQTCLmuCeFCYeQp7bq2yvABKxgRR8EgoomrqAQTK6LwVXeTbfnvQuIaiOB0xYCg/s320/3d8fc2a692684001a5a3b5ef13e3f559.jpeg" width="213" /></a></div><p><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">2023 ஆரம்பித்ததிலிருந்து ChatGPT, AI Art போன்ற வார்த்தைகள் காதில் விழ ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் ஏற்கெனவே பல வருடங்களாக ஆராய்ச்சியில் இருந்ததுதான் என்றாலும் மிகவும் பரவலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்போதுதான் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. ChatGPT போன்ற ஆப்களை மென்பொருள் துறையிலிருப்பவர்கள் இப்போது தமது அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். மென்பொருள் நிரலெழுதுபவர்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதுவே எழுதிக் கொடுத்துவிடுகிறது. மொபைல் ஆப்களுக்கான டிசைன்கள், வீடியோக்கள், இசைத் துணுக்குகள் என எதைக் கேட்டாலும் செய்துகொடுத்துவிடுகிறது. ஆனால் எல்லாமே ஆரம்ப நிலைகளில்தான். நான்கூட ChatGPT-ஐ மேலெழுந்தவாரியாக எனது சின்னச் சின்ன வேலைகளுக்கு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தச் சமாச்சாரத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட யூட்யூபில் வீடியோக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.</span></p><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இங்கே நாம் பார்க்கப் போவது குறிப்பாக AI Art எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் பற்றி. அதன் பிரச்சனைகள் பற்றி. இந்த மாதிரி மோஸ்தரில் ஒரு ஓவியம் வேண்டும் என்று டைப் அடித்து அதனிடம் சொல்லிவிட்டால் ஒரு சில விநாடிகளில் நாம் கேட்டதுபோல ஒரு அபாரமான ஓவியத்தை உருவாக்கி நம்மிடம் நீட்டுகிறது. அதுவும் பிரமிக்க வைக்கும் தரத்துடன், துல்லியத்துடன் (இணைப்புப் படங்களைப் பாருங்கள்). இது இப்போது உலகளாவிய ஓவியர்களின் வாழ்க்கையில் கிலி ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. </span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">செயற்கை நுண்ணறிவு என்பது அதற்கு நாம் அளிக்கும் விவரங்களையும், செய்திகளையும், கோப்புகளையும் அலசி, ஆராய்ந்து, கற்றுக்கொண்டு தொடர்ந்து அசுர வேகத்தில் தனது அறிவை விருத்தி செய்துகொண்டே போகிற சமாச்சாரம். இப்போது பரவலாயிருக்கும் AI Art என்கிற செயற்கை நுண்ணறிவுக் கலை 'Generative Art' என்றழைக்கப்படுகிறது. படங்கள், ஒலிகள் மற்றும் பிற ஊடகங்களை உருவாக்கும் அல்காரிதம்களால் நெய்யப்பட்ட இது கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இப்படியாக ஓவியங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழல், கலையுலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கொஞ்சம் வரவேற்பு. கொஞ்சம் எதிர்ப்பு. பாரம்பரிய ஓவியர்களின் படைப்புகளின் மேல் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பற்றிய கொஞ்சம் கேள்விகள் என்று இந்தச் சூழல் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இந்தச் செயற்கை நுண்ணறிவு ஓவியத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம். இவைகள் எல்லையில்லா இணையத்திலிருந்து உருவப்பட்ட கோடிக்கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து, காயப்போட்டு, அதிலிருந்து தாமாகவே கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் படைப்பாளிகளின் ஏற்கெனவே காப்புரிமை பெற்ற படங்களும் அடங்கும். அது பெற்ற ஓவிய அறிவின் தொகுப்பிலிருந்து நாம் கேட்பதற்கேற்ற விதத்தில், பதத்தில், கலவையில், சுவையில் மிக்ஸியில் போட்டு அடித்து பிரமாதமான ஒரு புது ஓவியமொன்றைச் சமைத்துக் கொடுக்கிறது. Stable Diffusion, Midjourney போன்ற எண்ணற்ற AI மாடல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயம் இதில் பிரபல ஓவியர்களின் பிரபல ஓவியங்கள் அடிப்படையாக (base) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட ஓவியர்கள் வழங்கியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. ஆக இது ஒரு மாதிரியான அனுமதியற்ற திருட்டு மற்றும் அத்துமீறல் என்றே சொல்லலாம். இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லித் தப்பித்துவிட முடியாது. </span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இம்ப்ரெசனிஸம், க்யூபிஸம், பாப் ஆர்ட் என் உங்களுக்கு எந்த ஸ்டைலில் ஓவியங்கள் வேண்டுமானலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் கேட்டபடி உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான். செயற்கை ஓவியங்களை உருவாக்குவதற்கென்று நிறைய இணைய தளங்களும், செயலிகளும் புற்றீசல்கள் போல நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதில் சில fotor, playgroundai, inatantart.io, lexica, Dall-E இன்னபிற. இங்கே சென்று Prompt என்று கேட்கப்படும் இடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு நீங்கள் விரும்பியபடி சில பல செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்தால் போதும். சுடச் சுட இன்ஸண்ட் ஆர்ட் தயார்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">தனித்துவமான AI Art ஓவியங்களைப் படைக்க கீழே கொடுத்திருப்பது போன்ற 'Prompt'-களைப் பயன்படுத்துகிறார்கள். (இப்போதைக்கு இதெல்லாம் நிபுணர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது.)</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">Aztec Indian shot down,pain face, in a scenic dystopian environment, intricate, elegant, highly detailed, centered, digital painting, artstation, concept art, smooth, sharp focus, illustration, artgerm, tomasz alen kopera, peter mohrbacher, donato giancola, joseph christian leyendecker, wlop, boris vallejo, perfect composition, beautiful detailed intricate insanely detailed octane render trending on artstation, 8k artistic photography, photorealistic concept art, soft natural volumetric cinematic perfect light, chiaroscuro, award - winning photograph, masterpiece, oil on canvas, raphael, caravaggio, greg rutkowski, beeple, beksinski, giger.
</span><br /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiesV_RaTJgjYNrZpwylfXkVDRQTubRUmLwaqr_jE2uyIspFIkn1Hr13LiIem7-XM4JwDDPArOhnV1adgoEF9f6HYqqbHQSj8St9D0slBST4c_GZp4iZMY81w31bMCMLyQoSNdZd-2ieycg9tJCet_G44p2yH2Zoe2RRyftT7986OOb4OvyUQ/s768/01c282c4fdc745c98d10ec89bb4206db.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="512" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiesV_RaTJgjYNrZpwylfXkVDRQTubRUmLwaqr_jE2uyIspFIkn1Hr13LiIem7-XM4JwDDPArOhnV1adgoEF9f6HYqqbHQSj8St9D0slBST4c_GZp4iZMY81w31bMCMLyQoSNdZd-2ieycg9tJCet_G44p2yH2Zoe2RRyftT7986OOb4OvyUQ/s320/01c282c4fdc745c98d10ec89bb4206db.jpeg" width="213" /></a></div></span><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">சில பிரபல ஓவியர்கள் கூட இதைப் பயன்படுத்தி சவாலான, தனித்துவமான ஓவியங்களை உருவாக்க இயலுமா என்று முயன்று வருகிறார்கள். <span style="letter-spacing: 0.1px;">
சில ஓவியர்கள் AI-உருவாக்கிய ஓவியங்களை அரை மனதாக ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது பாரம்பரிய ஓவியக் கலை வடிவங்களை மதிப்பிழக்கச் செய்யக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஒரு இயந்திரம் கலையை உருவாக்க முடியும் என்கிற விஷயம் மனிதர்களின் கலைப் படைப்புத்திறனின் மதிப்பு பற்றிய கேள்விகளை இங்கே முன்வைக்கிறது.</span><br /></span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இணையத்திலிருந்து படைப்புகள் எடுக்கப்பட்டு, கலக்கிப் பிசையப்பட்டு உருவாக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிற வகையில் தற்போதைய AI Art என்பது ஒரு நெறிமுறையற்ற விஷயம் என்பதில் உலகளாவிய படைப்பாளிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. படைப்பாளிகளின் காப்புரிமை என்பதும் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும் இப்படி உருவாக்கப்படும் AI ஓவியங்கங்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் தெளிவின்மை நிலவுகிறது.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">AI துணைகொண்டு உருவாக்கப்படும் ஓவியங்களுக்கு ஆழமில்லை என்றும், அது பாரம்பரிய ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வலைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் இவை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லையென்றும் சில ஓவியக் கலைஞர்கள் வாதிடுகிறார்கள். </span><div><span face="Roboto, Arial, sans-serif" style="color: #202124;"><span style="font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><br /></span></span><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv2dvYS64IesJ4GUct1vlUXgFNnhosE5XvoHUMjKO8LSNoHg51_x73VBVG-yFmVzzyTWYig6uL4v5s8-mQJ0rlza5aBmkb6P9ZjwiikZDuNAVKHowDUlUTlFQiOSyUc9fkFb_757rVx_QTE0JQgndc3SG9sCHTgti-M5ocGdVF582kuvVBpdU/s1024/7567d45adec44d36aa5600e29203f518.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="1024" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv2dvYS64IesJ4GUct1vlUXgFNnhosE5XvoHUMjKO8LSNoHg51_x73VBVG-yFmVzzyTWYig6uL4v5s8-mQJ0rlza5aBmkb6P9ZjwiikZDuNAVKHowDUlUTlFQiOSyUc9fkFb_757rVx_QTE0JQgndc3SG9sCHTgti-M5ocGdVF582kuvVBpdU/s320/7567d45adec44d36aa5600e29203f518.jpeg" width="320" /></a></div><div><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஓவியக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த ஓவியர்கள் ஒரு நல்ல உன்னத படைப்பை உருவாக்க பல நாட்கள், ஏன் பல மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் AI Art அதே போன்ற ஓவியங்களை வரைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே. மேலும் செயற்கை நுண்ணறிவானது கற்றுக்கொள்ளுதலிலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலிலும் காட்டும் மிதமிஞ்சிய வேகம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓவியர்களுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் லேசாக தலைதூக்கத் தொடங்கிவிட்டது. </span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">ஆனாலும் இதிலுள்ள பெரிய சவால் இவ்வகை ஓவியங்களை அசலான, உண்மையான ஓவியப் படைப்புகளாகக் கருத முடியுமா என்பதுதான். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் என்பவை வெறும் கருவிகள்தான். அதன் படைப்புத் திறன் மனிதர்களின் படைப்புத் திறனை ஒரு போதும் நெருங்கமுடியாது என்பதும் சிலரின் நியாயமான வாதம்.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">இருப்பினும், AI ஓவியங்களின் இந்த திடீர் எழுச்சியானது, ஓவியர்களுக்கு புதிய படைப்புச் சாத்தியங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கலையை பாரம்பரிய கலை நுட்பங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது தற்கால ஓவியருர்களுக்கு வேறொரு தளத்தில் புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான கலப்பினப் படைப்புகளை (Hybrid creations) உருவாக்கும் வாய்ப்பைக் கொடுக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNu3QI1Obm_vTCKg4KSpzfNBWqmx3gYFpoq9D2LJhrA5HdK7Qswi-ad4woiAbT13rWEK4bl5wQX5koXfEP0CrUuY_EsXdlYGBHVCFSXyQjG_t7ntv7MGytN6rKR1SOqcgsnuVPHLzqgEZsnipAQu96iMcJWTlaJfU9WU3v2ehiT3xyJaOxZOA/s512/8fbbd940fdcd4792a4be68e756da84f4.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="512" data-original-width="512" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNu3QI1Obm_vTCKg4KSpzfNBWqmx3gYFpoq9D2LJhrA5HdK7Qswi-ad4woiAbT13rWEK4bl5wQX5koXfEP0CrUuY_EsXdlYGBHVCFSXyQjG_t7ntv7MGytN6rKR1SOqcgsnuVPHLzqgEZsnipAQu96iMcJWTlaJfU9WU3v2ehiT3xyJaOxZOA/s320/8fbbd940fdcd4792a4be68e756da84f4.jpeg" width="320" /></a></div>ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரிதங்கள் மனிதர்களைப் போல உணர்வுகளை அனுபவிக்க இயலாதவை. ஆக அவைகளால் உருவாக்கப்படும் படைப்புகள் உணர்வு ஆழம் இல்லாமல்தான் இருக்கும் என்று அநேகம் ஓவியர்கள் நம்புகிற அதே நேரம் இதன் சாத்தியங்கள் கற்பனைக்கெட்டாத வகையில் விஸ்வரூபமாக விரிந்துகொண்டே போகின்றன. எதிர்காலத்தில் ’எந்திரன் சிட்டி’ போல ஒரு ரோபோ கருத்தாழமிக்க, உணர்வு பூர்வ ஓவியமொன்றை AI Art Diffusion Model-களைக் கொண்டு வரைந்து கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.
</span><br /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;">புத்தக அட்டை வடிவமைப்பு, போஸ்டர்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஓவியங்களை அநேகம் பேர் இந்த முறையில் உருவாக்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன. இப்போதைக்கு இவைகள் இலவசம் என்பதும் வசதி.</span><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><br style="background-color: white; color: #202124; font-family: Roboto, Arial, sans-serif; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;" /><span face="Roboto, Arial, sans-serif" style="background-color: white; color: #202124; font-size: 16px; font-variant-ligatures: none; letter-spacing: 0.1px; white-space: pre-wrap;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhRptUDN3HKy3HuAYomFl7G-IFJoTW4KZ4An_dgaAJ0BTuyX-7r8VAbFjZIobNTi3Kaw0-WhqyRzC7riCOlmMZ3HD1CRBwshPTvBoixPl-cQORVLVK7aI5Zbwtlcr2jPrdgFi6eXUReimuiKWNrYrQNqnpvP6wv_tJpt02pdcsWM6O7HZZDHo/s512/8a74668f55f94027b02172890a2fc1d9.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="512" data-original-width="512" height="287" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhRptUDN3HKy3HuAYomFl7G-IFJoTW4KZ4An_dgaAJ0BTuyX-7r8VAbFjZIobNTi3Kaw0-WhqyRzC7riCOlmMZ3HD1CRBwshPTvBoixPl-cQORVLVK7aI5Zbwtlcr2jPrdgFi6eXUReimuiKWNrYrQNqnpvP6wv_tJpt02pdcsWM6O7HZZDHo/w287-h287/8a74668f55f94027b02172890a2fc1d9.jpeg" width="287" /></a>இந்த மாதிரி செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு பக்கம் இது தொடர்ந்து வேகமாக பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொண்டேதான் இருக்கும். இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா, சாபமா என்கிற விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சத்தின் நோக்கமே தன்னை எல்லா வகைகளிலும் விரிவுபடுத்திக்கொண்டே போவதும், படைத்துக்கொண்டே இருப்பதும்தான். அதன் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். நடப்பதை பொருத்திருந்து கவனிப்போம்.</span><br /><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /></div></div>Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-51959986229258270112023-01-01T14:06:00.000+05:302023-01-01T14:06:21.431+05:30நீங்கள் எவ்வளவு ஸ்மார்ட் (SMART)?<p><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி ரகளையாய் பலவித மீம்ஸ்கள் உலாவரும் இக்காலகட்டத்தில் இதைச் சமூகத்துக்கு சொல்லலாம் என்று தோன்றியது. New year resolutions என்பது ஒரு கிளர்ச்சி மனநிலையில் தோன்றுவது என்பதால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது. உலகம் முழுவதும் மக்கள் திடீர் ஆரோக்கிய resolution எடுத்துவிட்டு ஜனவரி ஒண்ணாம் தேதி முதல் வாக்கிங் போக ஆரம்பிப்பார்கள். நடைபாதையெங்கும் கூட்டம் அம்மும். ஒரு வாரத்திற்கப்புறம் காற்று வாங்கும்.</span></p><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">Resolution எடுப்பதற்குப் பதிலாக 'SMART Goal Setting' - ஐ முயன்று பார்க்கலாம். நிறுவனங்களில் இது பிரபலம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த வருடத்தில் இதைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தால் அதை எப்படி அளப்பது (Measure) என்பதையும் வரையறுத்துவிடவேண்டும்.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். இந்த வருடம் சில சிறுகதைகள் எழுதவேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். இந்த 'சில' என்பதற்கு வரையறை கிடையாது என்பதால் இதன் மேலுள்ள கவனம் சிதறி கொஞ்ச நாட்கள் கழித்து இலக்கானது நீர்த்துப்போய்விடும். ஆகவே மார்ச் 30-க்குள் மூன்று சிறுகதைகள் என்று வரையறை செய்யவேண்டும். இந்த நம்பர்கள் மனதில் பதிந்து அதற்குத் தகுந்தார்ப்போல் நீங்கள் திட்டமிடத் துவங்குவீர்கள்.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">உங்களுக்கு 'எடை குறைப்பது' என்பது இலக்கு எனில் 'ஜூன் மாத இறுதிக்குள் பத்து கிலோ குறைப்பு' என்பது அளக்கக் கூடிய வரையறை. அதை நோக்கி ஓடலாம். இப்படி எல்லாவற்றிற்கும் ஏதாவது எண்களை இணைத்துவிடுவது உங்கள் இலக்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தொடர்சியாக அதை நோக்கி நகர முடியும். அதுவே ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும்.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">நூறு நாட்கள், நூறு படம் வரைவது என்கிற சவாலை நான் சென்ற வருடம் ஏற்றபோது இதுதான் நிகழ்ந்தது. எதைச் செய்கிறோம், செய்துகொண்டிருக்கிறோம், இன்னும் அடைய வேண்டிய தூரம் என்ன என்கிற தெளிவை இது கொடுத்தது. 100% வெற்றியும் கிட்டியது.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இப்படி எல்லாவற்றிற்கும் எண்களை இணைத்துவிடமுடியாதுதான். உதாரணத்துக்கு 'குடும்பத்தினருடனான தனிப்பட்ட உறவை மேம்படுத்துவேன்" என்பதை நீங்கள் நோக்கமாகக் கொள்வீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை எப்படி அளக்கமுடியும்? இங்கே நம்பர்கள் உதவாது. குடும்பத்தினர் முகத்தில் கூடும் புன்னகைகளும், அதிகரிக்கும் இனிய பொழுதுகளும்தான் இதற்கான அளவை. இதைக் கவனித்துக்கொண்டே வரவேண்டும். இதுதான் கணக்கு!</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">SMART Goals பற்றித் தெரியாதவர்களுக்காக:</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">Specific, Measurable, Achievable, Relevant, and Time-Bound. என்பதன் சுருக்கமே SMART.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இலக்கானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக, அளக்கக்கூடியதாக, அடையக்கூடியதாக, தொடர்புடையதாக, நேர வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">உதா: இந்த வருடம் சில சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிடுவது என்பது என்பது உங்கள் இலக்கானால் அதை இப்படி எழுதி வையுங்கள்:</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">2023 டிசம்பர் 31-க்குள் மூன்று மாதத்திற்கு ஒரு இடம் என்கிற கணக்கில், தென்னிந்தியாவில், வாகேமான், கூர்க், பாண்டிச்சேரி, மைசூர் ஆகியவைகளை பார்த்துவிடவேண்டும். இதற்கான பட்ஜெட் இருக்கிறதா, உடல்நிலை, காலநிலை, குடும்ப சூழ்நிலை ஒத்து வருமா என்பதெல்லாம் Achievable வகையில் வரும். மற்றதெல்லாவற்றையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.</span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">நான் இந்த வருடத்திற்கு இப்படித்தான் Goal போட்டு வைத்திருக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்களும் இதை முயன்று பார்க்கலாம்.<br /><br /></span><span style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"></span>Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-75230883085234401182017-11-08T20:57:00.001+05:302017-11-08T20:57:33.787+05:30நான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால்</span><span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 700; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;"> </span><span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">சமூகத்திற்கு ‘சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்’ கற்றுக்கொடுக்க தமிழில் ஒரு புத்தகமெழுதினால் என்ன என்று எழுத்தாளர்கள் என்.சொக்கனும், சத்யராஜ்குமாரும் விவாதித்துக்கொண்டிருந்த கட்டத்தில் என்னையும், காஞ்சி ரகுராமையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தார்கள். காஞ்சி ரகுராமாவது 100% அக்மார்க் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் ஆசாமி. நான் எதற்கு சம்பந்தமில்லாமல் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதில் என்னுடைய பங்களிப்பை அறிந்துகொள்ள சொக்கன் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு நான் எழுதிய பதில் இது.ஜிமெயில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டதை இங்கே பதிகிறேன்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b id="docs-internal-guid-221c130e-9c3d-92fd-f458-ef36931f5d1e" style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">*****************</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;"><br /></span></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">அன்புள்ள சொக்கன்,</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">யாதும் நலம்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">உங்கள் ஐடியா கண்டிப்பாக சிரிக்கத் தகுந்த பொருளல்ல. மாறாக ப்ரோக்ராமிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிற ஆனால் அதை இங்கிலீஸில் படித்து மண்டை உடைத்துக் கொண்டவர்களுக்கு (கொள்பவர்களுக்கு) பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆசையின் உன்னத வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">நான் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள முனைந்தபோது அதை எனக்குச் சொல்லித்தர லைஃப்டைம் ரிஸ்க் எடுத்து தன் (என் அல்ல) நேரத்தை வீணடித்தவர் சத்யராஜ்குமார். சில நேரங்களில் என் மக்கு மண்டையில் நறுக் என்று குட்டவேண்டும் என்கிற கோபத்தை அடக்கிக் கொண்டு எப்படி எனக்கு பொறுமையுடன் சொல்லித்தர முயற்சித்தார் என்று மிகுந்த ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் கடைசியில் விழலுக்கிறைக்கிற நீர் என்று ஒரு வழியாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஏன் ப்ரோக்ராமிங் என்பது எனக்கு அலர்ஜியாகவே இருந்தது, இருக்கிறது என்பதற்கு பலவாறான சாக்கு போக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதோ எனது வம்சாவளியில் யாரோ ஒருவர் கிரியேட்டிவ் ஆக இருந்து தொலைத்து அது வழி வழியாக ஜீன்களில் பதியப்பட்டு எக்குத்தப்பாக எனக்கு வந்து சேர்ந்துவிட்டது என்கிற தப்பான மிதப்பு. கிரியேட்டிவ் ஆன ஆட்களுக்கு வலது மூளையில் சோம்பேறி நியூரான்கள் ஜாஸ்தி. ப்ரோக்ராமிங் சமாச்சாரத்தையெல்லாம் அரைக்கண்ணைத் திறந்துகூடப் பார்க்காது என்பது அவ்வகையான சாக்குகளில் சில. (என் தொழில் கிராஃபிக் டிசைன் சம்பந்தப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்).</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஆனால் வேறு வழியில்லாமல் HTML மற்றும் CSS-ம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏரோப்ளேன் ஓட்டுவதைவிட மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவது மிக எளிதல்லவா? ஆனால் ஜாவாஸ்கிரிப்ட் முயற்சி செய்து பார்த்து அது கோவக்காய் பொரியல் மாதிரி பிடிக்காமலேயே போய்விட்டது.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஆனால் விதி வேறொரு உருவத்தில் வந்து விளையாடிப் பார்த்தது. கிராஃபிக் டிசைன் மென்பொருள்களில் ஒன்றான Adobe Flash-ல் அனிமேஷன் என்பது Action Script சம்பந்தபட்டது என்பதால் கொஞ்சமேனும் அதைக் கற்றுக் கொள்ளவேண்டிய நிர்பந்தம். Basic லெவலில் ஜிகினா வேலைகள் செய்து ஒப்பேற்றலாம். ஆனால் வேறு தளத்தில் அதை ஆழமாகப் படித்தே ஆகவேண்டியிருந்தது. அதற்கு basic programming அறிவு தேவையாயிருந்தது.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">இங்குதான் அட்டாச்டு டாய்லட்-காரர் வந்தார். அவர் பெயர் ரகுராம். என் அலுவலகத்தில் டெக்னிகல் ஆர்க்கிடெக்டாக பணி புரிபவர். வாழ்க்கையில் software evangelist ஆக வேண்டுமென்ற லட்சியத்தோடு அலைகிற ஆசாமி. 10 நாளில் என்னை ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ளவைக்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக்கொண்ட வேகத்தில் தோல்வியைத் தழுவியவர். இதற்காக Action Scripting 2.0 என்ற புத்தகத்தை வாங்கின காசுக்கு சஞ்சீவனத்தில் நான்கு தடவை ராஜகீயச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம் என்று சொன்னேன். இப்போதும் என்னை விடாமல் ஒரு ப்ராஜக்டுக்காக Microsoft Expression Blend-ல் XAML Programming படி என்று ஆயாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">ப்ரோக்ராமிங் என்பது நீங்கள் சொன்னமாதிரி என்னை நெளிய வைக்கிற அய்ட்டமாகவே இருக்கிறது. அடிப்படையிலேயே எங்கேயோ தப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனால் எப்போதும் ஒரு Tech Savvy ஆக இருக்கிற (அல்லது காட்டிக்கொள்கிற) ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. புதிய டெக்னாலஜிகள் பற்றி இணையத்தில் மேய்வதும், அறியாத பயல்களிடம் அவை பற்றி (அவர்களின் கொட்டாவியை பொருட்படுத்தாது) சிலாகித்து ஜல்லியடிப்பதும் எனக்கு பொழுது போக்கு.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">நிறைய டெக்னிக்கல் சமாசாரங்களைச் சொல்லிக்கொடுத்து என்னுடைய ஞானக்கண்ணில் அரைவாசி திறந்துவைத்த பெருமை சத்யராஜ்குமாரையே சேரும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மென்பொருள் இமயம். புதிதாய் ஒரு மொழி வந்தால் (லெட்ஸ் ஸே ஃபர் எக்ஸாம்பிள் : C# அல்லது dot Net) அதற்கான புத்தகத்தை சென்னை ஈஸ்வர் புக் ஸ்டோரிலோ லேண்ட் மார்க்கிலோ வாங்கிவந்து ராஜேஷ்குமார் புத்தகம் மாதிரி கடகடவென்று விடிவதற்குள் படித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவார். மறுநாள் அவருக்கு டாட் நெட் தெரிந்திருக்கும்). இளம் தம்பதிகளுக்காக பிரத்யேகமாக Safe Period Indicator ப்ரோக்ராம் ஒன்றை அவர்.... சரி அதை பிறகு சொல்கிறேன்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">ஆக “என் மூளைக்கு எட்டலை” என்று உதறித்தள்ளியவர்களில் நானும் ஒருவன். கிராஃபிக் டிசைன் என்பதுடன் ப்ரோக்ராமிங் சரிவிகிதத்தில் கலக்கும்போது கிடைக்கிற அட்வாண்டேஜ் கேரியர் கிராஃபில் எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கும். நான்கூட லெக்ஸிங்டன் குதிரை ரேஸ் கம்பெனிக்காக ஃப்ளெக்ஸ் ப்ரோக்ராமில் விளையாடியிருக்கலாம். ஆக ப்ரோக்ராம் அடிப்படைகளை தோளில் கைபோட்டுக்கொண்டு நித்யரஞ்சிதமாகச் சொல்லிக்கொடுக்கிற ஒரு புத்தகம் இல்லை என்பது ஒரு குறைபாடுதான். கொஞ்சம் நாற்றமடித்தாலும் டாய்லெட் உதாரணத்தால் வேரியபிளுக்கு விளக்கம் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லமுடிகிறதல்லவா. இதை சரியான இடத்தில் சரியான சமயத்தில் நீங்கள் யோசித்திருப்பது புரிகிறது. சுஜாதாவின் தலைமைச் செயலகம், ஏன் எதற்கு எப்படியெல்லாம் ஒரு பாமரனுக்கும் கூட நிறைய விஷயங்களை எப்படி எளிதில் புரியும்படி விளக்கியதோ அப்படி. சம்சாரத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு “முடியாது. ஆனால் சினிமாவுக்குப் போய்வந்து நைலக்ஸ் புடவையைக் களையும் போது ஒரு மாதிரி சரசரவென்று சத்தம் வரும். அதுவேண்டுமானால் நிகழலாம்.” என்று Static current என்பதை ரகளையான உதாரணத்தோடு சொல்லிக்கொடுத்திருப்பார்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">மனப்பாடமாக டெக்ஸ்ட் புக் எழுதி விற்றுத் தாக்குகிற புத்தகங்களிலிருந்து விலகி வித்தியாசமாய் இந்தமாதிரி எழுதலாம்தான். நல்ல ஐடியா. என்னை மாதிரி ப்ரோக்ராமிங்கை வெறுத்தவர்களுக்கும் ஒரு புதிய சுவாரஸ்யத்தை உண்டு பண்ணும் என்றுதான் தோன்றுகிறது.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">என்னுடைய இந்த மின்னஞ்சல் வேறு உத்திகள் உதாரணங்கள் எதுவுமில்லாமல் சுய எள்ளலுடன் கூடிய புராணமாக இருப்பதையும் உணர்கிறேன். சும்மா ஒரு ஆரம்பநிலை உரையாடல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">சித்ரன்</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<b style="font-weight: normal;"><br /></b></div>
<div dir="ltr" style="line-height: 1.656; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 700; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">பி.கு:</span><span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;"> இந்த முயற்சி ஒரு சில அடிகள் முன்னேறி பிறகு நின்றுபோய்விட்டது.</span></div>
<div dir="ltr" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<br /></div>
</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-27917212319459568372017-07-20T08:43:00.000+05:302017-07-20T10:47:17.322+05:30நார்மனின் கதவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
”சாராபாய் ஹால் எங்க இருக்கு?” சென்ற ஞாயிற்றுக்கிழமை IIT Madras Research Park வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஐந்து செக்யூரிட்டி ஆசாமிகளிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வகுப்பெடுப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். மேற்படி கேள்விக்கான பதிலாக குணா படத்தில் ”பார்த்த விழி பார்த்தபடி” பாடல் துவங்கும்முன் கமலஹாசனுக்கு எல்லோரும் அபிராமி இருக்கும் திசையைக் கை காட்டுவார்களே, அந்த மாதிரி கை காட்டினார்கள். ஆனால் வெவ்வேறு திசைகளில்.<br />
<br />
அவர்கள் கை நீட்டலைப் பின்பற்றி முதலில் ஒரு கட்டிடத்தை எட்டிப்பார்த்து அங்கே சாராபாய் இல்லை என்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டிடத்திற்குள் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்தால் அது ஃபுட் கோர்ட். பிறகு எதிர்பக்கமிருக்கும் கட்டிடத்திற்குச் சென்று அங்கு வாசலில் வீற்றிருக்கும் வட இந்தியக் காவலாளியிடம் கேட்டால், ”மெயின் எண்ட்ரன்ஸ் ஜாயியே” என்றான். எல்லா வாசல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்க எது மெயின் எண்ட்ரன்ஸ் என்பதில் குழப்பமாயிருந்தது. ஒரு வழியாக கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ’சாராபாய்’ என்று போர்டு போட்ட அந்தக் ஹாலை கண்டுபிடித்து விட்டேன். போர்டானாது ஒருவர் கண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்திருந்தார்கள். ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் சைஸ்தான் இருக்கும். இந்த இடத்தை அடைய ஒரு இருபது நிமிடங்களாவது தேடி நடந்திருப்பேன். என்ன காரணம்? 1) வளாகத்தில் எந்த இடத்திலும் எது எங்கே இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகைகளோ அம்புக்குறிகளோ இல்லை. 2) அங்கே வேலை செய்யும் வட இந்திய செக்யூரிட்டிகளுக்கு சாராபாயைத் தெரிந்திருக்கவில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br />
சாராபாய் ஹாலுக்குள் நுழைய இரண்டு கதவுகள் இருந்தன. முதலாவது ஒரு கண்ணாடிக் கதவு. இரு புறமும் திறக்கலாம். கைப்பிடியைப்பிடித்து முன்பக்கம் இழுக்கலாம். அல்லது எதிர்ப்பக்கமாகத் தள்ளலாம். அதைத் தள்ளித் திறந்து உள்ளே சென்றேன். மூன்றடிக்கு அப்புறம் இரண்டாவது கதவு. மரத்தால் செய்யப்பட்டது. அதன் கைப்பிடியைப் பிடித்து முதலாவது கதவைத் தள்ளின மாதிரியே தள்ளினேன். திறக்கவில்லை. என் பக்கமாக இழுத்தேன். திறக்கவில்லை. பிறகு கைப்பிடியை கீழே திருப்பி உள்பக்கமாகத் தள்ளினேன். திறக்கவில்லை. மீண்டும் என் பக்கமாக இழுத்ததும் திறந்தது. இந்த என் தடுமாற்றத்தை ஏற்கெனவே ஹாலுக்கு வந்தமர்ந்திருந்த முத்துக்குமார் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் “நார்மன்ஸ் டோர்” என்று சொல்லிக்கொண்டோம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
<br />
அதன் பிறகு ஹாலுக்கு வந்து சேர்ந்த பிற மாணவர்களும் அந்தக் கதவைத் திறக்கத் தடுமாறுவதை நாங்களிருவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் மாணவர்களுக்கு எடுக்கச் சென்ற வகுப்பு, பயனர் அனுபவ வடிவமைப்பு (User Experience Design) பற்றியது. அந்த வகுப்பிற்கான எங்கள் பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷனில் “நார்மன்ஸ் டோர்” என்று ஒரு தலைப்பும் இருந்தது. அதுவே எங்கள் புன்னகைக்குக் காரணம். இந்தக் கதவு அனுபவத்தைப் பற்றி மாணவர்களிடமே கேட்டு இந்தத் தலைப்பு சம்பந்தமான விஷயத்தை ஒரு அரை மணிநேரம் ஓட்டினோம். இது நாம் உபயோகிக்கிற ஒவ்வொரு பொருளிலும் அனுபவிக்கிற விஷயம்தான். நார்மன் ”The design of everyday things" என்ற புத்தகத்தின் ஆசிரியர். கதவுகளைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.</div>
<div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
<br /></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/yY96hTb8WgI/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/yY96hTb8WgI?feature=player_embedded" width="320"></iframe></div>
<div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
<br /></div>
</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-12636641270003030832017-07-02T23:04:00.000+05:302017-07-02T23:04:24.450+05:30டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6419158.post-85263909290249603142017-01-10T14:10:00.001+05:302017-01-15T19:14:02.775+05:30மாயக்கதவுகளுக்கு முன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்வு பற்றிய நம்பிக்கைகளை தினசரி தகர்த்துக் கொண்டிருக்க தூரத்தில் தெரியும் ஒளி போன்று ஏதாவது ஒரு விஷயம் அந்நம்பிக்கைகளை திரும்பவும் வலுப்படுத்தி வாழ்வின் மீதான பிடிப்பை அதிகப்படுத்தும். அவை சில நல்ல வார்த்தைகளாகவும் இருக்கலாம்.</div><br>
<div dir="ltr">
<a href="https://padhaakai.com/2017/01/01/behind-the-magic-door" target="_black">பதாகை.காம்</a> இணைய இலக்கிய இதழில் அத்தகைய வார்த்தைகளைக் கோர்த்து எழுதிய புத்தாண்டுச் செய்தி இதோ!</div><br>
<div dir="ltr">
<a href="https://padhaakai.com/2017/01/01/behind-the-magic-door" target="_black">தொடர்ந்து படிக்க</a></div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6419158.post-17385045757458323112016-09-15T08:53:00.001+05:302016-09-15T08:53:44.202+05:30வருஷம் 16<p dir="ltr">கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.</p>
<p dir="ltr">சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல். </p>
<p dir="ltr">"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"</p>
<p dir="ltr">"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"</p>
<p dir="ltr">"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."</p>
<p dir="ltr">"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"</p>
<p dir="ltr">அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.</p>
<p dir="ltr">சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.</p>
<p dir="ltr">"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."</p>
<p dir="ltr">இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.</p>
<p dir="ltr">பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது. </p>
<p dir="ltr">பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.</p>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-81791740583008491452016-06-22T22:06:00.000+05:302016-06-22T22:33:11.428+05:30யார் என்று தெரிகிறதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வது அதன் வழக்கமாயிருந்தது).<br />
<br />
விஸ்வரூபத்தில் கமல் கேட்டமாதிரி மறுமுனை புதிர் போட்டது. "யாரென்று தெரிகிறதா?"<br />
<br />
குரல்களை வைத்து நபர்களை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றும் சொன்னேன். ஆண் குரல் என்று மட்டும் கணிக்க முடிந்தது.<br />
<br />
குரல் விடுவதாயில்லை. "நான் பாலு பேசறேன். உடுமலைபேட்டை. உங்கூட 6F, 7B, 8E, 9E, 10D -ல ஒண்ணாப் படிச்சேன்."<br />
<br />
புருவங்களை நெரித்து, மூளையை அலசி, கன்னத்தில் கைவைத்து, தலை முடியைப் பிசைந்து என எப்படி யோசித்தும் இந்த அபாயகர ஞாபகக்காரனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு கேள்வியில் 'பாலு' வை அவன் கோர்ட்டுக்குத் தட்டிவிட்டேன்.<br />
<br />
"தெரியலையே.. எந்த பாலு?"<br />
<br />
மூளையில் ஒரே ஒரு நியூரான் உதவிக்கு வந்தது. லேசாய் பொறி தட்டி, "N. N. பாலனா?" என்றேன். சில பேர்களை இப்படி இனிஸியலோடு மட்டுமே நினைவறைகளில் சேமித்துவைத்ததால் வந்த சிக்கல்.<br />
<br />
சரியாகத்தான் கண்டுபிடித்தேன் போலும்.<br />
<br />
"நானேதான். பரவால்லயே.. ஞாபகம் வெச்சிருக்க."<br />
<br />
பிறகு குசல விசாரிப்புகள். மலரும், கிளறும் நினைவுகள். "இரு.. உங்கூடப் பேச இன்னொரு ஃப்ரெண்டு வெய்ட் பண்றான். ஃபோனை அவன்ட்ட தர்ரேன்.."<br />
<br />
மறுபடியும் ஒரு ஹலோ. மறுபடியும் ‘நான் யார் என்று தெரிகிறதா?.’ இந்தக் குரல் கொடுத்த ஒரே க்ளூ "நானு, பாலு, அய்யர் ரமேஷ் எல்லாரும் ஒண்ணாவே சுத்துவோம்.."<br />
<br />
இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கண்களை உருட்டி யோசித்துப் பார்த்ததில் ஒரே நாளில் இரண்டாம் முறையாகப் பொறி தட்டியது.<br />
<br />
"மோகன்ராஜா?"<br />
<br />
"யெஸ்"<br />
<br />
அடடே என்று ஆச்சரிய அதிர்ச்சி ஒன்று என்னைக் கவ்வியது. மனத்திரையில் ஸ்பைரல் சுற்ற ஆரம்பித்து ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWUDtXmVvVAFBr3RHeVMdPTJmcESW87dJ8R6QFJJGrAZwuOtdV9yH-Ae54s4phqHHdFO0MEdepeouihRf7qAuTEgdgl4BxpPdi8PtU4U_DUR_mzsBQr8P1CUgTqrPQNGMeZpxekw/s1600/fight-1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="189" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWUDtXmVvVAFBr3RHeVMdPTJmcESW87dJ8R6QFJJGrAZwuOtdV9yH-Ae54s4phqHHdFO0MEdepeouihRf7qAuTEgdgl4BxpPdi8PtU4U_DUR_mzsBQr8P1CUgTqrPQNGMeZpxekw/s320/fight-1.gif" width="320" /></a></div>
<br />
<br />
இந்த மோகன்ராஜ் மேற்சொன்ன எல்லா வகுப்புகளிலும் என்னோடு படித்தவன்தான் (என்று நினைக்கிறேன்). இரண்டு பேரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவன் நன்றாக வரையக்கூட செய்வான். ஆனால் எட்டாம் வகுப்பு வந்தபோது எதற்கென்றே தெரியாமல் எங்களுக்குள் போர் மூண்டது. அடிக்கடி மோதல் நிகழ ஆரம்பித்தது. என்ன காரணத்துக்காக என்று பின்னாளில் எல்லா ரூமிலும் உட்கார்ந்து யோசித்திருக்கிறேன். பிடிபடவில்லை.<br />
<br />
மோகன்ராஜ் அப்போதே கராத்தேவில் ப்ளாக்பெல்ட் வாங்கியிருந்தான் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெறும் வாய்ச்சண்டையுடன் நிறுத்திக்கொள்வேன். கபடி விளையாடும்போது தாட்டியான பையன்களைக் கூட மணலில் வீழ்த்தும் லாகவத்தை அறிந்திருந்தேன் என்றாலும் அவனின் அப்பர் கிக், லோயர் பஞ்ச்-சுக்கெல்லாம் அப்போதைய எனது நோஞ்சான் உடம்பு தாங்கியிராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை. அவனோ பேஸ்கட் பால் போஸ்ட்டில் தொற்றி ஒரே மூச்சில் தொடர்ந்து ஐம்பது அறுபது புல்-அப்ஸ் எடுப்பவன்.<br />
<br />
பெரியகடைவீதிக்கு இணையாகச் செல்லும் சந்து ஒன்றிற்குள் எங்களுக்குள் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. கெட்ட வார்த்தை ஏவுகணைகளால் (நாயே.. பன்னி போன்ற..) தாக்கிக்கொண்டோம். அதற்கப்புறம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. பத்தாவது படிக்கும்போது ஒரு முறை கபடி விளையாட்டின்போது அவன் எனது எதிர் டீமில் இருந்தான். கபட் கபட் என்று சொல்லிக்கொண்டே வந்து நான் அசந்த நேரத்தில் இடது காலை நூற்றென்பது டிகிரி கோணத்தில் உயர்த்தி எனது தாடையைப் பதம் பார்த்தான். நிலைகுலைந்து நின்றேன். நான் அவுட். 0.09% மீதமிருந்த எங்கள் நட்பும் அன்றோடு மொத்தமாய் அவுட்.<br />
<br />
பிறகு +2 முடித்தபிறகு அவன் சட்டம் படிக்கப் போனான் என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது மட்டும் ஞாபகத்திலிருந்தது.<br />
<br />
முப்பது வருடங்கள் கழித்து அந்த மோகன்ராஜின் குரல்.<br />
<br />
'நம் சண்டை ஞாபகமிருக்கிறதா' என்றேன். சிரித்தான். விவரங்கள் புரியாத வயதில் எதற்கென்றே தெரியாமல் நிகழ்ந்த நிகழ்வுகள். எதற்கும் அர்த்தங்கள் கிடையாது.<br />
<br />
பிறகு ஒரு சில கதைகள் பேசினோம். நாங்கள் படித்த பள்ளிக்கு அவன் சமீபத்தில் சென்றபோது தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் பலகையில் என் பெயர் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னான்.<br />
<br />
"ரொம்ப சந்தோஷம் நண்பா" என்றான்.<br />
<br />
"விரைவில் சந்திப்போம்" என்றேன்.<br />
<br />
உடனே ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை விடுத்தான். அவனது ஃப்ரொபல் பட முகம் என் நினைவிலிருந்த முகத்தோடு பச்சக் என்று பொருந்திப் போனது. காலம் தந்த வழுக்கையைத் தவிர.<br />
<br />
போனை வைத்தபிறகு நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.<br />
நான் படித்த வகுப்புகளில் 9E, 10D தவிர எனக்கு வேறு செக்ஷன்கள் நினைவுக்கு வரவில்லை என்பது உறுத்தலாக இருந்தது. ஒரு சில வகுப்புத் தோழர்கள் தவிர வேறு யாரும் ஞாபகத்திலில்லை என்பது ஒரு குற்ற உணர்வாகத் தொக்கி நிற்கிறது.<br />
<br />
நீண்ட நெடிய நகர வாழ்க்கை பால்ய நினைவுகளை மொன்னையாக்குகிறதா என்கிற கேள்வியுடன் தூங்கப்போனேன்.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6419158.post-6790344488868126492016-04-28T08:50:00.000+05:302016-04-28T08:53:00.073+05:30மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAKo3GlQA93H2Xg8s6R8kt0qYf6l147Z2Z1gHJ9Fi7VuG0S-M42prZKE3EwwVF-aJfrnIm0ZiODnqv5me2ZxMPDHmzt1JsK0cV_qyNW09dcx-46Iuy93GG7FLI4bV0yOlJKxUQEA/s1600/mango.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAKo3GlQA93H2Xg8s6R8kt0qYf6l147Z2Z1gHJ9Fi7VuG0S-M42prZKE3EwwVF-aJfrnIm0ZiODnqv5me2ZxMPDHmzt1JsK0cV_qyNW09dcx-46Iuy93GG7FLI4bV0yOlJKxUQEA/s1600/mango.jpg" /></a></div>
<br />
முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).<br />
<br />
எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.<br />
<br />
’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.<br />
<br />
அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.<br />
<br />
இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.<br />
<br />
ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.<br />
<br />
அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”<br />
<br />
அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.<br />
<br />
அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.<br />
<br />
’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.<br />
<div>
<br /></div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-44697153768278704702016-04-17T22:40:00.002+05:302016-04-18T08:09:33.617+05:30நான் ஏரிக்கரை மேலிருந்து..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.<br />
<br />
மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.<br />
<br />
கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.<br />
<br />
இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.<br />
<br />
ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.<br />
<br />
நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.<br />
<br />
நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.<br />
<br />
அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”<br />
<br />
“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.<br />
<br />
பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-14325653460938584642015-09-02T16:22:00.003+05:302015-09-02T16:27:46.578+05:30தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்: ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"><img alt="http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYWmQ-qYiPXdsFA-OBC05YcdCqm_ejQrLIVq2-bd5ZGansnbIEl1TQ4hV1T7YpLULbXpimt4BZgeZbvTGVryiM9VY3gKiJBtOxLkCTz3nRBzVs8gFu5YPGYMSnM8mqlsFQmgLBRw/s1600/javvarisi-211x300.jpg" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
”<b>ஜவ்வரிசி
வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்</b>” - எனது இந்த
வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு.
இதில் சுமார் ஐம்பது பதிவுகள் உள்ளன. இதை இலவச மின்னூலாக
வெளியிட்டிருப்பது <a href="http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/" target="_blank">Freetamilebooks,com</a><br />
<br />
இதனை PDF, ePub மற்றும் Mobi வடிவங்களில் <a href="http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/" target="_blank">இங்கே </a>தரவிறக்கிப் படிக்கலாம்.<br />
<br />
இந்தப் புத்தகத்தின் ’<b>என்னுரை</b>’-யிலிருந்து:</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
2004
ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன்.
‘புள்ளி’ என்று நாமகரணமிட்டு பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான்
துவங்கினேன். அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது
சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே
மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு
பதினொரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள்
எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்).
அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து
தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
எண்ணிக்கையா
முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே
சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது
கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும்
வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர்
பார்க்கிறார்கள்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
‘புள்ளி’
என்ற என்னுடைய வலைத்தளம் தவிர சித்ரன் டாட் காம் மற்றும் “இன்று”
தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு
வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
ஏன்
அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு
எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும்
பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான
“எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு
இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer’s block) என்கிற
மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும்
வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
இல்லாத
ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான்.
ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ
தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற
அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே
“எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு
நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள
முடியும்?</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
“சிறுகதை
எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது.
முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், கிழக்கு
பதிப்பகம் வெளியாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும்,
மின்னூலாக இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையும் தவிர
சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
ஆயிரத்தெட்டு
வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும்,
கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது
மதிப்பிற்கும் பொறாமைக்கும் உரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு
மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது?</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
ஆனாலும்
இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம்,
குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய
முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது.
எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம்
சமாதானமடையலாம். அப்படியாக சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுத
வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்தப் பதிவுகள்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
பல
வருடங்களுக்கு முன் மைக்ரோ ப்ளாகிங் ட்ரெண்டெல்லாம் வருவதற்கு முன்னால்
எழுதப்பட்டவை என்பதால் இந்தப் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நீளமாகவே
இருக்கும். மேலும் இதில் நிறைய விஷயங்கள் அந்தந்த கால கட்டத்தைச்
சார்ந்தவையாக இருக்கும் என்பது முன்கூட்டிய டிஸ்க்ளைமர்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
கணினி
என்பது அலைபேசியாகவும், டேப்லட் ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில்
இனிமேல் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது
தீர்மானம். இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை
உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி
உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது
வருடங்கள் வாழவேண்டியிருக்கும்.</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-50572557314870823782015-08-12T13:18:00.000+05:302015-08-12T13:18:41.850+05:30இதனால் அறியப்படும் நீதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: block; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 0px 0px 6px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்ரென்று சாலையில் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு ஒரு ஏழெட்டுத் தடவை கட கடவென உருண்டார்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: block; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
நல்லவேளையாக முன்னாலோ, பின்னாலோ கார்களோ, கனரக வாகனங்களோ எதுவும் இல்லை. நானும் இன்னும் ஓரிருவரும் வண்டியை நிறுத்தி அவரையும், அவ<span class="text_exposed_show" style="display: inline;">ர் பைக்கையும் ஓரம் கட்டினோம். அது ஒரு கல்லூரி மாணவன். முழங்கையிலும், முழங்காலும் சிராய்த்து சிவப்பாய் ரத்தத் திட்டுகள். அவனால் இடது கையைத் தூக்க முடியவில்லை. வலி முகத்தில் தெரிந்தது. ப்ராக்சர் ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன். தலை சுற்றுகிறது என்றான். நான் என் பையனின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தேன். பாதி மயக்கத்தில் சரிந்தவனை ஒரு லோடு அடிக்கும் மினி டெம்போவில் உட்காரவைத்தோம்.</span></div>
<div class="text_exposed_show" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<div style="margin: 0px 0px 6px;">
தெளிந்தபின் ”எதுக்குப்பா இவ்ளோ வேகமா போற?” என்று கேட்டதற்கு, ”ரோட்டில் பள்ளம் இருந்ததை கவனிக்கவில்லை” என்றான். திரும்பிப் பார்த்தபோது பள்ளம் எதுவும் என் கண்ணில் படவில்லை.</div>
<div style="margin: 6px 0px;">
உதவி செய்ய வந்த டெம்போ ட்ரைவரும், இன்னொருவரும் அவனை பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ’நீங்க கிளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார்கள். அவனிடம் ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ’தலைல ஏதாவது அடி பட்டுச்சாப்பா?” என்றேன். “இல்லை” என்றான்.</div>
<div style="margin: 6px 0px;">
ஹெல்மெட் அணிந்திருந்தான்.</div>
</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-5160363801226147342015-08-12T13:12:00.000+05:302015-08-12T13:13:18.311+05:30தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"><img alt="http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/" border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmuuCMuejGa5P7LohPmBISNeYrLs9Z7lStn73N4U1xW-1KFHaT31LHq_3HhOYP6YIwsaaEUDZWjRpGRYR0_x8MqDVmRwsrAcNGgMH9CZNI9WS4GYclO-i4OZaT-YDPlpFH3E6RUA/s320/TEV-Book-Wrapper-opt.jpg" width="213" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக தரவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<a href="http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/" target="_blank">http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/ </a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
மின்னூல் வெளியீடு :<a href="http://freetamilebooks.com/" style="background: transparent; border: none; color: black; cursor: pointer; font-size: 16px; margin: 0px; outline: none; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;">http://FreeTamilEbooks.com</a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: none; color: black; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 22px; margin: 0px; orphans: auto; outline: none; padding: 12px 0px; text-align: start; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
</div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-72205617436817654722015-01-22T23:36:00.000+05:302015-01-22T23:36:09.157+05:30 குறுநூல் - சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 7.05pt; mso-outline-level: 2; text-align: justify; text-indent: 0cm;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://play.google.com/store/books/details?id=lIJSBgAAQBAJ" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"><img alt=" சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq2g9KosH7xFywaY6tvS8MFxXb0WO1U9Cr2liyHtk87uNFojDAbVOL0GiofLDqBE8DrXG4zIn0BtaDTr-wud6QUFYACv4ZZfzcw_y8a3fTGyyA3ubpaqSRB7XOe-M75A_udrQM8Q/s1600/singapore.jpg" height="320" width="240" /></a></div>
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது
நான் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை சிறு சிறு குறிப்புகளாக </span><span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">வலைத் தளத்தில் எழுதினேன்.
இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை
நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் அவற்றை எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட</span><span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;"> </span><span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.</span><br />
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;"><br /></span>
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">பின்னர் ’குறுநூல்’ ஐடிவாவை திரு. சொக்கன் சொன்னபோது பேசாமல் இதை குறுநூல் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு என் நன்றிகள். </span><br />
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;"><br /></span>
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">இது விலையில்லாப் புத்தகமாக இப்போது கூகுள் புக்ஸில் கிடைக்கும். இதை நீங்கள் டவுன்லோடு செய்தபிறகு மற்றவர்களுக்கும்கூட பகிரலாம்.</span><br />
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;"><br /></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 7.05pt; mso-outline-level: 2; text-align: justify; text-indent: 0cm;">
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;">சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை
செல்ல நினைப்பவர்களுக்கு அதன் அதிசயங்களை, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிற அளவில் மட்டுமே இந்த நூல் இருக்கும்.</span><br />
<span style="color: #555555; font-family: Latha, sans-serif; font-size: 10pt; line-height: 13.2pt; text-indent: 0cm;"><br /></span>
<span style="color: #555555; font-family: Latha, sans-serif;"><span style="font-size: 13px; line-height: 17.6000003814697px;">கூகுள் புக்ஸில் இந்த மின்னூலைப் பெற <a href="https://play.google.com/store/books/details?id=lIJSBgAAQBAJ" target="_blank">இங்கே க்ளிக்கவும்</a>.</span></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 7.05pt; mso-outline-level: 2; text-align: justify; text-indent: 0cm;">
<br /></div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-3757630495843968832014-12-22T22:54:00.000+05:302014-12-22T22:54:33.296+05:30ஆரோக்கியமான உரையாடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆட்டு தாடி வைத்திருந்த ஒரு நண்பரிடம் 'அப்படியே உங்க தாடி கார்ல் மார்க்ஸ் மாதிரியே இருக்கு' என்று சொல்லப்போக துவங்கியது ஒரு உரையாடல்.<br />
<br />
”கார்ல் மார்க்ஸ்க்கு தாடி இப்படி இருக்காது” என்றார்.<br />
<br />
“அப்படியா.. இருங்க.. நெட்ல பாத்துரலாம்.”<br />
<br />
நான் கூகுளில் கார்ல் மார்க்ஸ் என்று தேட புசுபுசுவென வெண்தாடியுடன் அவர் வேறு மாதிரி இருந்தார். நான் சமாளித்து “அப்ப லெனின்னு நினைக்கிறேன்.”<br />
<br />
நல்ல வேளையாக நண்பரின் தாடி லெனினோடு கச்சிதமாகப் பொருந்தியது.<br />
<br />
“ஆங்.. மார்க்ஸூன்னு வாய் தவறி தப்பா சொல்லிட்டேன்..”<br />
<br />
“கம்யூனிஸம் படிப்பீங்களோ..?”<br />
<br />
“நோ.. கத்தி படத்துல இட்லி சமாச்சாரம் அளவுக்குத்தான் தெரியும்.. ”<br />
<br />
”புக்ஸ் நிறைய படிப்பீங்களா?”<br />
<br />
“நிறைய படிச்சிட்டிருந்தேன்.. இப்ப ரொம்ப கம்மியாயிருச்சு.. ரெண்டு வருஷத்துக்கு முன்னால புக் ஃபேர்ல வாங்கினதெல்லாம் படிக்காம அப்படியே கிடக்குது..”<br />
<br />
“எந்த மாதிரி புக்ஸ்?”<br />
<br />
“நிறைய தமிழ் நாவல்ஸ்.. சிறுகதைகள்... சுஜாதால ஆரம்பிச்சு, ஆதவன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம்..”<br />
<br />
நான் முடிப்பதற்குள் நண்பர் குறுக்கிட்டு “எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோஹன்..” என்று தொடர்ந்தார்.<br />
<br />
“ஆமா.. ஆமா..” நான் தொடந்து “சதத் ஹஸன் மாண்ட்டோ..” என்று பீலா விட ஆரம்பிப்பதற்குள்..<br />
<br />
”நான்கூட படிப்பேன்”<br />
<br />
“எந்த மாதிரி?”<br />
<br />
“ஓஷோ, சாருலதா.. இந்த மாதிரி”<br />
<br />
“சாருலதாவா அது யாரு.. பெங்காலி ரைட்டரா?”<br />
<br />
“தமிழ்தாங்க... சாரு... சாரு”<br />
<br />
“நிவேதிதாவா..”<br />
<br />
முகத்தில் இருபது வாட்ஸ் சி.எல்.எஃப் பல்ப் எரிந்து “ஆங்.. அவர்தான்..”<br />
<br />
“ஓஷோன்னவுடனே ஞாபகம் வருது.. அவரோட ’கிருஷ்ணா எனும் மனிதனும் அவன் தத்துவங்களும்’ படிச்சிருக்கீங்களா?”<br />
<br />
“இல்லையே.. நல்லாருக்குமா?”<br />
<br />
“தெரியலை.. நானும் படிச்சதில்லை.. கேள்விப்பட்டிருக்கேன்.”<br />
<br />
“அவரை மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரே.. ஜகதீஸ் வாசுதேவன்னு. விகடன்ல எழுதுவார்..”<br />
<br />
“ஓஹோ..”<br />
<br />
“இந்த மூச்சுக்காத்தை இழுத்து விட்டு.. அதுக்கு என்ன பேரு? அதெல்லாம் சொல்லித்தருவாங்க அவர் சென்டரிலே.. பிரயாணம்-ங்கற மாதிரி வரும்”<br />
<br />
“பிராணயாமம்..”<br />
<br />
“அதேதான்.. நான் ஒரு வாரமா பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... எங்கப்பா வளச்சு வளச்சு பண்ணுவார் யோகாசனமெல்லாம்... என்னையும் பண்ணச்சொல்வார்.. ”<br />
<br />
“ரொம்ப நல்லது.. என்ஜினீயரா இருந்த என் நண்பர்கூட வேலையை ரிசைன் பண்ணி பல வித யோக நிலைகளைக் கடந்து...”<br />
<br />
“யோகியாயிட்டாரா..”<br />
<br />
“இல்ல மறுபடி என்ஜினீயரே ஆயிட்டார்..”<br />
<br />
நண்பர் பதினெட்டு மூலிகைகள் அடங்கிய மெடிமிக்ஸ் சோப்பால் குளித்தமாதிரி உணர்ந்து ”சரி.. வேலையைப் பாப்போம்..மார்க்ஸ்-ல ஆரம்பிச்சு.. எங்கெங்கேயோ போய் முடிஞ்சிருச்சு பேச்சு.. நல்ல ஹெல்த்தியான கான்வெர்ஷேசன். மேலும் நிறைய பேசுவோம்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-17321717201007171772014-04-01T08:36:00.000+05:302014-04-01T08:36:42.151+05:30தருணம் - குறுநாவல் - இலவச மின்னூல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTMsvwYXw-QHDywLZQmp-aW5Qr-PcrN9158wjI8rrDD8LPf-yB2yvspZtA-cZwwSbmsiX-FR_kPo1F0gUJWHrZDiwxtUQvvuX4CoOxAGw9anPQ2UW6xSHLKfaKacHgHY6oH1xnbA/s1600/TharunaM1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTMsvwYXw-QHDywLZQmp-aW5Qr-PcrN9158wjI8rrDD8LPf-yB2yvspZtA-cZwwSbmsiX-FR_kPo1F0gUJWHrZDiwxtUQvvuX4CoOxAGw9anPQ2UW6xSHLKfaKacHgHY6oH1xnbA/s1600/TharunaM1.jpg" height="320" width="225" /></a></div>
<div style="background-color: white; border: none; color: #666666; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; line-height: 22px; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
<b>தருணம் </b>என்ற தலைப்பிலான எனது குறுநாவல் இப்போது இலவச மின்னூலாக <a href="http://freetamilebooks.com/ebooks/tharunam/" target="_blank">இங்கே </a>கிடைக்கிறது.</div>
<div style="background-color: white; border: none; color: #666666; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; line-height: 22px; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.</div>
<div style="background-color: white; border: none; color: #666666; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; line-height: 22px; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
அலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது? எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது? சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன? இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.</div>
<div style="background-color: white; border: none; color: #666666; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; line-height: 22px; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
நான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.</div>
<div style="background-color: white; border: none; color: #666666; font-family: LatoWeb, Helvetica, 'Arial sans-serif'; font-size: 14px; line-height: 22px; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
இதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்துக்கும், freetamilebooks.com ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.</div>
<div style="background-color: white; border: none; outline: none; padding: 12px 0px; vertical-align: baseline;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13.63636302947998px; line-height: 17.563634872436523px;">இதை epub, Mobi, PDF ஆகிய வடிவங்களில் தரவிறக்கிப் படிக்க, பகிர: </span><span style="background-color: transparent; font-size: 14px; line-height: 17.563634872436523px;"><span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><a href="http://freetamilebooks.com/ebooks/tharunam/">http://freetamilebooks.com/ebooks/tharunam/</a></span></span></div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-51369233692033077512014-03-04T22:16:00.003+05:302014-03-04T22:26:35.565+05:30ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzmdOl41s1w27O-P2QdUubQwlAtgydX0e1RhpXqxT28PfgwiSKfXWkn7gJ8tuANatp5-3xOPesRGVhzcq6jRu1PSEByGtP7jTgApvs0jLxLfI34JLO3Sug7TiPGqBdqz8cdKEYpQ/s1600/reader.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzmdOl41s1w27O-P2QdUubQwlAtgydX0e1RhpXqxT28PfgwiSKfXWkn7gJ8tuANatp5-3xOPesRGVhzcq6jRu1PSEByGtP7jTgApvs0jLxLfI34JLO3Sug7TiPGqBdqz8cdKEYpQ/s1600/reader.png" height="200" width="200" /></a></div>
95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.<br />
<br />
இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!<br />
<br />
சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.<br />
<br />
நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.<br />
<br />
நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.<br />
<br />
சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”<br />
<br />
சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”<br />
<br />
சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”<br />
<br />
சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”<br />
<br />
சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”<br />
<br />
இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.<br />
<br />
சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.<br />
<br />
சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”<br />
<br />
“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.<br />
<br />
நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.<br />
<br />
நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.<br />
<br />
புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.<br />
<br />
”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..<br />
<br />
சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்.. ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6419158.post-56070128224672799832014-02-08T11:50:00.000+05:302014-02-08T11:55:13.669+05:30என். சொக்கனின் 'ஏ.ஆர் ரஹ்மான்'<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEbApk-1Y7faiKMsaCvBdVgwLbPOCQRKLEG5YMM8Upbk2LWAFyI85NThqo3d3PdMX1wxn_3Gv9eBKgiLW84gMLM45nwqEjk2WQt9JO_edTcl_FPx65l6WCInfdbqLz-ClEe_3gRA/s1600/a-r-rahman-free-e-book-250x400.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEbApk-1Y7faiKMsaCvBdVgwLbPOCQRKLEG5YMM8Upbk2LWAFyI85NThqo3d3PdMX1wxn_3Gv9eBKgiLW84gMLM45nwqEjk2WQt9JO_edTcl_FPx65l6WCInfdbqLz-ClEe_3gRA/s1600/a-r-rahman-free-e-book-250x400.jpg" height="320" width="200" /></a></div>
’ஹைவே’ படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானின் Implosive silence என்கிற இசையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நண்பர் என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் எனது ஃபோல்டருக்குள் (மின்புத்தகமாக) வெகுகாலமாகப் படிக்கப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. இனியும் தாமதிக்கலாகாது என எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்படிச் சொல்வதிலிருந்தே அது எவ்வளவு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக அருமையாக, எளிமையாக, அரிய தகவல்களுடன்.<br />
<br />
பொள்ளாச்சியில் நண்பர்கள் குழுவுடன் இளையராஜா, மற்றும் இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை சிலாகித்தும், கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தும் திரிந்துகொண்டிருந்த காலகட்டம். பொள்ளாச்சியின் கிராமங்களில் சுற்றித் திரியும்போது பின்னணியில் எங்கேயாவது எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் கிராமம் சார்ந்த படப்பாடல்கள் (கிழக்கு வாசல், சின்னத் தம்பி, மற்றும் பல ராமராஜன் படத்துப் பாடல்கள்) அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக, மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. 'மொட்டை.. சான்ஸே இல்ல..’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வெளியாகும் ராஜாவின் பாடல்களை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு கிடந்த சமயத்தில் இனிய அதிர்ச்சியாக, அழகான ஆச்சரியமாக வந்து விழுந்தது “சின்னச் சின்ன ஆசை..”. ’யாருய்யா இது?’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக அதே சமயம் அட்டகாசமான பாடல்கள்.<br />
<br />
சின்னச் சின்ன ஆசை வருவதற்கு முன்னரே DD-யில் வரும் உகாதி புரஸ்கார் என்னும் நிகழ்ச்சியில் ஏ.எஸ்.திலீப்குமார் இசைத்த அருமையான டைட்டில் இசைக்கு ரசிகனாக இருந்தேன். வாராவாரம் அதைக் கேட்பதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த திலீப்குமார்தான் இந்த ரஹ்மான் என்றறிந்ததில் மேலும் ஆச்சரியமாகிப் போனது.<br />
<br />
அடுத்தடுத்து வந்த ரஹ்மான் பாடல்கள் திரையிசையில் ஒரு புதிய துவக்கம் நிகழ்ந்திருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தன. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை ரஹ்மானின் மகா ரசிகனாக ஆனவன் நான்.<br />
<br />
ராஜாவைப் போலவே ரஹ்மானும் ஒரு மகா இசை ஆளுமை. ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ ரஹ்மானையும் அதே அளவு பிடிக்கும். ஒரு அபாரமான பர்சனாலிட்டியாகவும் ரஹ்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என் அருகில் நின்று ஷெல்ஃப்பிலிருந்து ஏதோ புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகு சட்டென்று புரிந்துகொண்டேன். அவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். அவரோ புத்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பி யாரையோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். ஆர்வமேற்பட்டு நானும் திரும்பிப் பார்த்தால் ஒரு பத்து பேருக்கு மத்தியில் நடுநாயமாக நின்றுகொண்டு ஏதோ இசை ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தார் ரஹ்மான். அப்போது இந்த மனிதர் இவ்வளவு உயரம் போவார் என்று தெரிந்திருக்கவில்லை.<br />
<br />
இந்தப் புத்தகத்தில் சின்னச் சின்னச் சுவாரஸ்யமான தகவல்களுடன் ரஹ்மானின் இசைப் பயணத்தை, வாழ்க்கையை, அவரது உழைப்பை, இசையில் இந்த உயரத்தை எட்ட ரஹ்மான் அனுபவித்த கஷ்டங்களை ஒரு சாதாரணனுக்குக் கதை சொல்வது போலச் சொல்கிறார் சொக்கன். இந்தப் புத்தகம் ஒரு சின்ன மன எழுச்சியைக்கூட தந்தது எனலாம். கடின உழைப்பு + வித்தியாசமான சிந்தனைகள் + தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் + செய்வதை புதிதாக, நேர்த்தியாகச் செய்தல் + எப்போதும் அமைதியாக, தளும்பாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருத்தல் - இவைதான் மாபெரும் வெற்றிக்கான சூத்திரம். இதையும் இந்தப் புத்தகத்தில் ரஹ்மானின் வாழ்க்கையை படிப்பதினூடே உணர்ந்துகொள்ளவும் முடிவதே அந்த மன எழுச்சிக்குக் காரணம்.<br />
<br />
இப்புத்தகத்தை இலவசமாக அளித்த என்.சொக்கனுக்கு நன்றிகள் பல.<br />
<br />
இந்த இலவச மின்புத்தகத்தை PDF ஆக டவுன்லோடு செய்து படிப்பதற்கான சுட்டி கீழே:<br />
<br />
<a href="http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book">http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book</a></div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6419158.post-14090277164869941302013-12-22T15:05:00.000+05:302013-12-22T15:06:24.070+05:30புதிய முகங்கள். புதிய கதைகள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrMPkLuSX6Sj5GFCMMKIcMR2XOC0h3nqHvmh_BJ5JhhoxIG-Y_8D8iV2iUqsQYhG1jnFOZlFHbhPyQZg3w58h-EyK2i98howCqBkHzFknN8bWBkV9xchMaPKmIEF5IKNGcHywgJg/s1600/1465365_10202927781015098_256917173_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrMPkLuSX6Sj5GFCMMKIcMR2XOC0h3nqHvmh_BJ5JhhoxIG-Y_8D8iV2iUqsQYhG1jnFOZlFHbhPyQZg3w58h-EyK2i98howCqBkHzFknN8bWBkV9xchMaPKmIEF5IKNGcHywgJg/s200/1465365_10202927781015098_256917173_n.jpg" width="146" /></a></div>
இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.<br />
<br />
நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.<br />
<br />
’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.<br />
<br />
தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6419158.post-82316184504147989752013-12-22T11:47:00.002+05:302013-12-22T14:50:02.266+05:30வட போச்சே - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.<br />
<br />
சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.<br />
<br />
இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.<br />
<br />
<u><a href="http://chithran.blogspot.in/2013/12/1.html" target="_blank">வடைபோச்சே - 1:</a></u><br />
<div>
<br /></div>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-44075485551817739702013-12-13T11:01:00.003+05:302013-12-22T11:49:04.308+05:30வட போச்சே - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. <a href="https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0">https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0</a><br />
<br />
நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinTxQ7yOIz8jhCbQ7RTws47oWTcS3SCSWW9OO1OeJXVInPtdDujtMOvogsBckOIIhlGSbf3w9TFWofTqx3mb4dgwTR7qcn2b2-mO6iRl4xVjK0lHwTSjupZwWjtpKcEZatMDpedQ/s1600/dal-vada.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinTxQ7yOIz8jhCbQ7RTws47oWTcS3SCSWW9OO1OeJXVInPtdDujtMOvogsBckOIIhlGSbf3w9TFWofTqx3mb4dgwTR7qcn2b2-mO6iRl4xVjK0lHwTSjupZwWjtpKcEZatMDpedQ/s200/dal-vada.JPG" /></a></div>
கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.<br />
<br />
இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார்.<br />
<br />
இப்படியாக இருபது நிமிடங்கள்.
தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.<br />
<br />
<a href="http://chithran.blogspot.in/2013/12/2.html" target="_blank">வடைபோச்சே - 2</a></div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6419158.post-29913680627316914092013-11-22T13:25:00.002+05:302013-11-22T13:39:11.482+05:30ஜீவகாருண்யம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyt269WynMb6ezfwUWtg_kBdBEvfXIuqHlDgIX7g5Y2oQ4ORZuGfijB8NhcSNw4AkXcDQK4CjoYiYFKSo0drIX8bTiWlUmyDIOifJrx84cHFJhJ_HLEsiM55IL1FbeD9Q2ospNCA/s1600/stray_dog_shadows.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyt269WynMb6ezfwUWtg_kBdBEvfXIuqHlDgIX7g5Y2oQ4ORZuGfijB8NhcSNw4AkXcDQK4CjoYiYFKSo0drIX8bTiWlUmyDIOifJrx84cHFJhJ_HLEsiM55IL1FbeD9Q2ospNCA/s320/stray_dog_shadows.jpg" width="320" /></a><br />
எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.<br />
<br />
விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.<br />
<br />
இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.<br />
<br />
இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6419158.post-24411931834309194072012-07-28T10:25:00.000+05:302012-07-31T14:24:38.850+05:30இறந்தவன் - சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="color: #555555; font-family: Verdana, 'BitStream vera Sans', Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px; margin-bottom: 10px; padding: 0px; text-align: -webkit-auto;">
<strong style="margin: 0px; padding: 0px;"><i>ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012</i></strong></div>
<div style="color: #555555; font-family: Verdana, 'BitStream vera Sans', Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px; margin-bottom: 10px; padding: 0px; text-align: -webkit-auto;">
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.<br />
<br />
மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.</div>
<div style="color: #555555; font-family: Verdana, 'BitStream vera Sans', Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px; margin-bottom: 10px; padding: 0px; text-align: -webkit-auto;">
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?<br />
<br />
எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.</div>
<div style="color: #555555; font-family: Verdana, 'BitStream vera Sans', Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px; margin-bottom: 10px; padding: 0px; text-align: -webkit-auto;">
<a href="http://chithran.wordpress.com/2012/07/01/irandhavan/" target="_blank">(மேலும் படிக்க..)</a></div>
</div>Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-12807531733386605342012-02-18T12:49:00.001+05:302012-02-18T12:49:45.024+05:30மழைக்காதல் - சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.<br />
<br />
கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: <a href="http://chithran.wordpress.com/2012/02/17/rain-love/" target="_blank"><b>மழைக்காதல்</b></a> </div>Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6419158.post-80751520570537351632012-01-31T21:56:00.002+05:302012-12-30T21:33:25.487+05:30முதல் பாடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’<br />
<br />
நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.<br />
<br />
கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.<br />
<br />
பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiin_3NnlrnJtY2eWfsm9WJAGkKYMJvHcGiEoxvDolEudvY4YXTfLEWQTxlVlmgHFbU3rMI45uBaFJpjAE2OAimVKIqzAXFQ1kzHOxJI_NRV1hE_M11TZFiNHOtkbLHUa6JIi5Prw/s1600/KP.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiin_3NnlrnJtY2eWfsm9WJAGkKYMJvHcGiEoxvDolEudvY4YXTfLEWQTxlVlmgHFbU3rMI45uBaFJpjAE2OAimVKIqzAXFQ1kzHOxJI_NRV1hE_M11TZFiNHOtkbLHUa6JIi5Prw/s1600/KP.jpg" /></a></div>
<br />
<br />
இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br />
<br />
குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.<br />
<br />
இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.<br />
<br />
பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.<br />
<br />
தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை. <br />
<br />
தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.<br />
<br />
பாடலைக் கேட்க:. <a href="http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru%20" target="_blank">http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru </a><br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/y401EGb2MH8" width="420"></iframe>
</div>
Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com13